இப்படியும் மனிதர்கள்:
சிந்தனை தெளிவு என்பது கற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல அது இறையச்சத்தோடு சேர்ந்து வெளிப்படுவது. எம் சமகாலத்தில் ஒரு புதுமையான போக்கு மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. மார்க்க விஷயத்தில் குழப்பமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் கடத்தப்படுவதன் மூலம் தங்களை அறிவுஜீவிகளாக வெளிப்படுத்த நினைக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சிறிதேனும் யோசிப்பதில்லை. இவ்வாறான போக்கு ஏகத்துவம் பேசுபவர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறார்கள். இவர்களால் சமூகத்திற்கு எந்த பயனுமில்லை. மாறாக அவர்கள் குழப்பத்தை மட்டுமே விளைவிக்கிறார்கள்.இவ்வாறான மக்கள் தங்களின் பலஹீனங்களை நியாயப்படுத்துவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறான்.
இந்த விஷயத்தை புரிந்து கொள்ள நாம் வரலாற்றில் இருந்து படிப்பினை பெறுவது கடமையாயிற்று.
ஒரு ஸஹாபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நபியே`என்னுடைய உள்ளத்தில் தோன்றும் சில விஷயங்கள் வெளிப்படுவதை விட்டும் நான் அஞ்சுகிறேன் என்றார்கள்.அதற்கு நபி (ஸல்) கூறினார்கள். இதுதான் ஈமானின் உச்ச நிலை என்றார்கள்.
குழப்பமான சிந்தனைகளில் எப்படி கையாளுவது என்பது நபியின் பாசறையில் பயின்ற ஸஹாபாக்களுக்கு நன்றாக புரிந்துஇருந்தது.
இம்மாதிரியான சிந்தனைகள் சாதாரணமாக எல்லோரிடத்திலும் ஏற்படக்கூடியதே. அதனுடைய தாக்கம் நம் உள்ளத்தில் ஏற்படாதவாறு அல்லாஹ்விடத்தில் அதிகமாக துஆ செய்வது நல்லது. யாஅல்லாஹ்
குழப்பமான சிந்தனையை விட்டும் குழப்பவாதிகளை விட்டும் எம்மை பாதுகாத்து அருள்புரிவாயாக ..ஆமீன். .







No comments:
Post a Comment