
மேலும் இந்துக்களின் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் அங்கு சில ஓவியங்கள் இருந்தன. அதற்கு லயோலா காலேஜ் நிர்வாகமும் மன்னிப்பு கேட்டது.
இங்கு அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மதஉணர்வுகளை புண்படுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது அதில் ஏந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் வர்ணாசிரம கொள்கையின்படி மனிதர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி சாதிய பிளவுகளை உண்டுபண்ணி அதில் அரசியல் ஆதாயம் அடையக்கூடியவர்கள் மதத்தின் பெயரால் ஒரு விஷயத்தை முன்னெடுக்கும் போது சாதாரண மக்களாகிய நாம் சரியான புரிதலோடு அணுகுவதுதான் சிறந்ததாக இருக்கமுடியும். மதத்தின் பெயரால் எத்தனையோ கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. மதத்தின் பெயரால் கோவில் கருவறையில் 8 வயது சிறுமிக்கு நடந்த அந்த கொடூரம். சாதிய ஆதிக்கத்தால் நடந்த எத்தனையோ ஆணவ கொலைகள் இப்படி மதத்தின் பெயரால் பல துயரங்கள் அரங்கேறியுள்ளது. மதத்தை முன்னிலைப்படுத்தி வர்ணத்தின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் கடவுள்கள் நமக்கு தேவையா? அந்த ஓவியங்களும் சித்திரங்களும் இம்மாதிரியான கடவுள்களை தான் குறிக்கும் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுளோம்.
No comments:
Post a Comment